மேளங்கொட்டுடா தாளம் தட்டுடா
நாளும் நம்ம நாளே
ஆச மொத்தமும் ஆடி தீரனும்
கேளும் வரங்கேளு ஊர சுத்தனும்
ஊஞ்சல் கட்டனும் வேலி தாண்டிடாரு
காஞ்ச மண்ணுல சாமி செஞ்சிதான்
வேண்டி கேட்டுப்பாரு
ஆடி தண்ணிதான் தேனா இனிக்கும்
வேற வழி ஏது
ஆறு குளந்தான்
ஏட்டில் இருக்கும் பார்க்க முடியாது
மேடு பள்ளந்தானே
தெனம் தாண்டி ஓடனும்
வாழும் எந்த நாளும்
ஒன்னு கூடி பாடனும் (மேளம்)
கண்ண கட்டி காட்டுல
கண்ணா மூச்சி ஆடுவோம்
வானம் பார்த்த பூமியில்
பட்டு பூச்சி தேடுவோம்
பள்ளியில சொல்லாதத கேளு இனி……
தண்ணி குடம் தூக்குறவன்
பாடம் படி……
கை வீசியே காத்தோடதான் கொண்டாடு நீ……
சந்தோசத்த ஊருக்குள்ள தேடி புடி……
மேடு பள்ளம் தானே
தெனம் தாண்டி ஓடனும்
வாழும் எந்த நாளும்
ஒன்னு கூடி பாடனும் (மேளம்)

No comments:
Post a Comment