தெலுங்கில் பிரபலமான நடிகை சிலம்பரசனின் முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் அறிமுகமானார்..சமீபத்தில் அவர் மனம் உருகும்படியான தனது காதல் குறித்த பேட்டியை அளித்திருக்கிறார்.அதில் கூறியதாவது:
"நான் ஒருவரை மனதார காதலித்தேன். ஆனால் இரண்டு காரணங்களால் அந்த காதல் தோல்வி அடைந்தது. அதையும் மீறி நான் திருமணம் செய்திருந்தால் அதே காரணங்களுக்காக அந்த திருமணமும் முறிந்திருக்கும்.அந்த நபரின் நடத்தையால் நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆனாலும் அவர் நல்லவர். மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. நம்மை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் வாழ்வதும் அவருக்காக காத்திருப்பதும் அவருக்காக நேரம் ஒதுக்கி வேலை செய்வது என்பதும் என் வேலை கிடையாது.அதனால்தான் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். இந்த முடிவில் மாற்றம் எதுவும் இருக்காது". இவ்வாறு சார்மி கூறினார்யார் அந்த காதலன் யாராக இருக்கக்கூடும் இவரை வைத்து இயக்கு இயக்குநராக இருக்கலாம் இவருடன் நடித்த நடிகர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லது திரைக்கு சம்பந்தமில்லாத தொழிலதிபர் யாராவது இருக்கலாம் யாருக்கு தெரியும் சார்மிக்கே வெளிச்சம்..
No comments:
Post a Comment